ஞானியும் நானும்
இதோ தர்மம் என்றேன்
எதைத் தர்மம் என்கிறாய்? என்றார்
கொடுப்பதை என்றேன்
பரிமாற்றம் தர்மம் அல்லவே என்றார்
இது என் சொந்தம் என்றேன்
பெற்றதைத் தானே கொடுக்கிறாய்? என்றார்
ஆமாம் என்றேன்
பெறுவதைக் கொடுப்பது பரிமாற்றம் என்றார்
தர்மம் என்றால் என்ன? என்றேன்
பெறுவதும் கொடுப்பதும்
வெவ்வேறாக இருப்பது என்றார்.
தர்மவான்கள் இவ்வுலகில் உண்டா? என்றேன்
தாவரங்கள் தர்மவான்களே என்றார்.
***************************************
தாயைத் தேடும் (குரல்) குயில்
தாயின் வயிற்றில் கருவானேன்
காக்கையின் கூட்டில் உருவானேன்
உருவத்தில் நானும் கறுப்புத்தான்
உச்சரிப்பில் தான் சிறிது வேறு
கா..கா.. என்றன உடன் பிறப்புக்கள்
கூ… கூ.. என்றேன் நான்
கூ... கூ.. தன் குழந்தையல்ல என்று
கொத்தித் திரத்தியது தாய்க் காகம்
கொத்திய வேதனை தாங்காமல்
கூவி அழைத்தேன் என் தாயை
என் கூவல் என் தாய்க்கு எட்டவில்லை
என்றாலும் இன்னும் நான் சோரவில்லை
கூ.... கூ! கூ... கூ.!!