காலத்துக்கு காலம்
பிறக்கும் போது அழுதேன் புரியாத காலம்
இறக்கும் போது அழுவார்கள் தெரியாதகாலம்
படிக்கும் போது அழுதேன் முடியாத காலம்
காதலின் போது அழுகிறேன் கஷ்ட காலம்
***************************************************************
இத்தனைக்கும் ஆசைப்படு ..!
அதிகாலையில் துயில் எழுவதற்கு ஆசைப்படு.....!
கட்டணம் இன்றி காலை கடனை கழிக்க ஆசைப்படு ...!
துயில் எழுந்தபின் குளிக்க ஆசைப்படு.........!
குழித்தபின் காபி குடிக்க ஆசைப்படு....!
அழகாக உடையணிய ஆசைப்படு...!
உடுத்த உடையை ஊத்தையாக்காமல் ஆசைப்படு...!
நிற்கும் பஸ்சில் ஏற ஆசைப்படு....!
நேரம் தவராமல் வேலை செய்ய ஆசைப்படு .....!
மெதுவாக கதைக்க ஆசைப்படு ....!
மென்மையாக கதைக்க ஆசைப்படு ...!
மெத்தன போக்கை நீக்க ஆசைப்படு...!
பெண்களை மதிக்க ஆசைப்படு.....!
*****************************
அத்தனைக்கும் மன்னித்து விடு ...!
இடைக்கிடையே அண்ணனின் அடி உதை..
தொடர்ச்சியான அப்பாவின் திட்டல் ...
கேலியாக இதயத்தை கீரும் அக்காவின் வார்த்தை ...
வயது வரம்பில்லாமல் தம்பியின் வசப்பு ...
இரவெல்லாம் அழுது அழுது கண்வீக்கம்
சாப்பிடும்போது அம்மாவின் அன்பு
கலந்த சூடானகதை ...வார்த்தைகள் ...
இதையெல்லாம் மறந்துவிட்டு ...
என்னை
கண்டவுடன் பூரண சந்திர சிரிப்பு ..!
எப்படி உன்னால் மட்டும் முடிகிறது ..!-அன்பே
அத்தனைக்கும் என்னை மன்னித்து விடு ...